உள்நாடுசூடான செய்திகள் 1

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

கப்ராலுக்கு அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழு அழைப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து