உள்நாடு

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலை மீறினால் போக்குவரத்து மீண்டும் முடங்கும்

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி

மஹிந்த மீது சஜித் குற்றச்சாட்டு…