உள்நாடு

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கே. சுஜீவா பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு,  கட்டண வார்டில் சிகிச்சை பெற்று, தற்போது வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மலானி பொன்சேகாவின் மறைவு நாட்டிற்கும் திரைப்படத் துறைக்கும் பாரிய இழப்பாகும் – சஜித் பிரேமதாச

editor

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கையாகும் – சஜித்

editor