சூடான செய்திகள் 1

வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) நேற்று (03) வெள்ளிக்கிழமை  நாத்தாண்டிய அசோகபுர பிரதேசத்தில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மதர வீதி, ஹெட்டிவத்த, நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், மாரவில் பொலிஸார் சந்தேக நபருடைய வீட்டை நேற்று வெள்ளிக்கிழமை (03) சோதனை செய்தனர்.

இதுதொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி,பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்

தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொண்ட நபர்

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது