வகைப்படுத்தப்படாத

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியில் 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வீடுகளின்றி இருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு அதிகார சபை விரிவான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு அதிகார சபையின் மூலம் கேகாலை மாவட்டத்தில் 500 குடும்பங்களுக்கு ‘விசிறி வீடமைப்பு’ வேலைத்திட்டத்தின் கீழ் 1 இலட்சம் ரூபா வீதம் கடனுதவி வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் இரத்து

அநுராதபுரம் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

மக்களின் உடல் வெப்பத்தை அளக்க இராணுவத்தினர் களத்தில்