உள்நாடு

வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 13 பேர் கைது

(UTV|கொழும்பு) – சட்ட விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 13 பேர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீசா அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து மற்றும் சீன பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 தொடக்கம் 44 வயதுக்கிடையிலான 9 பெண்கள் உட்பட ஆண்கள் நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட சுமார் 10,300 வெளிநாட்டு சிகரட்டுக்கள் என்பன சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மரக்கறிகள் விலையில் வீழ்ச்சி!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

எமது கட்சியில் அலி சப்ரி, இசாக், முசரப் ஆகியோர் நிச்சயமாக வேட்பாளராக இருக்க மாட்டார்கள் – ரிஷாட் பதியுதீன்

editor