உள்நாடு

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி

(UTV | கொழும்பு) –

அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி -காரைதீவு பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி அல்லது காட்டுப்பூனையினத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

மக்கள் வாழும் பகுதியில் வியாழக்கிழமை (24) இரவு சருகுப்புலி உள் நுழைந்து கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இம்மாவட்ட பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கம்பன்பிலவிற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சஜித் ஒப்பம்

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை