சூடான செய்திகள் 1

விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…

(UTV|COLOMBO)  நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த ​கோரிக்கைக்கு இணங்க மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.

அதேவேளை, ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

(VIDEO) கிரேண்ட்பாஸ் பொலிஸ் பொதுமக்கள் பிரிவும் ,பதுள்ளவத்த பொலிஸ் மக்கள் சேவைப் பிரிவு மற்றும் பதுள்ளவத்த சர்வமத மக்களும் இணைந்து அன்னதான நிகழ்வு 

பாகிஸ்தானின் குடியரசு தினம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதி