உள்நாடு

வாதுவை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு

(UTV | களுத்துறை) –  வாதுவை மற்றும் களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை முற்பகல் 800 முதல் பிற்பகல் 7.30 வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொதுபிட்டி, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொடை, பெந்தோட்டை, போம்புவல, பயாகலை, பேருவளை, மக்கொன, அழுத்கமை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாந்த அபேசேகரவுக்கு பிணை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை இன்றும்