உள்நாடு

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்த வாக்காளர் கைது

(UTV | கொழும்பு) – நாவலபிட்டி மத்திய மகாவித்தியாலயத்திற்கு வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது ​செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாக்களிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தமையை தேர்தல் கடமையில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர் இனங்கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் நாவலபிட்டி இம்புலுபிட்டி பகுதியை சேர்ந்த 31வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை

பல சோதனைகளுடன் சாதித்த Sensei மர்ஜான் ஹரீர்.