உள்நாடுபிராந்தியம்

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து – பெண் படுகாயம்

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (21.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதியிக்கு திரும்ப முற்பட்ட போது நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தீபன்

Related posts

நீதிமன்ற செயற்பாடுகள் நாளை மீளவும் ஆரம்பம்

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது அரசாங்கத்தின் உண்மை நிலை தற்போது வெளிப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி