உள்நாடு

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV | கொழும்பு) –வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று 24 முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு வந்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதை அடுத்து  அதிரடியாக விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பேரூந்துகள் அனைத்தும் தண்ணீரினால் கழுவிய பின்னர் தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து அதன் பின்னரே சேவையில் ஈடுபடுகின்றன.

வவுனியா சாலையிலுள்ள பேருந்துகள்  தொற்று நீக்காமையினால் தாம் சேவையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பேரூந்துகள் தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்தியதன் பின்னர் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

Related posts

பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டம் ஆரம்பம்