உள்நாடு

“..’ரணில் ராஜபக்ஸ’ ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி..” – ஹிருணிகா

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.

பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஹிருணிகா பிரேமச்சந்திர;

“.. விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை. அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருகிறார்.

ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார். “ரணில் ராஜபக்ஸ” ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி..” என ஹிருணிகா மேலும் கூறினார்.

Related posts

அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையில் மாற்றம்

சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் – மன்னாரில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தேர்தல் பிரசாரம்

editor