உள்நாடு

ரணிலின் அறிவிப்புக்கு பின்பே எமது அறிவிப்பு : பசில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்க்ஷ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்  பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை பொறுப்பேற்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் கட்சி ஏற்கனவே நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் பசில் ராஜபக்க்ஷ ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.

Related posts

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய ஆலோசனை

கொரோனா தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட நொடியில் பெற்றுக் கொள்ள

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழு விஜயம்