2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய யோஷித ராஜபக்ஷவுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து நியாயமான விளக்கத்தை வழங்கத் தவறியதால், பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, இந்தப் பணம் நிலையான வைப்புகள் மற்றும் வங்கி வைப்புகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும், இந்தக் கணக்குகள் டெய்சி ஃபொரஸ்ட் என்ற நபருடன் கூட்டுக் கணக்காகப் பராமரிக்கப்பட்டு வருவதும் விசாரணைகளில் தெரியவந்தது.
அதன்படி, இந்த வழக்கில் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்ணையும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்ணுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் பணமோசடி சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக வழக்குத் தாக்கல் செய்ய பொலிசார் இன்று (11) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, குறித்த பெண்ணுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார்.