அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளின் கூட்டம் இன்று (01) இடம்பெற்றது.

கொழும்பு, நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் எவ்வாறு பங்களிப்பு செய்வது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான விசேட அறிவித்தல்!

அபுதாலிப் ஹாஜியார் குடும்பம் 40 வருடங்களின் பின் ” மீண்டும் கிராமத்திற்கு ” சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வு!