சூடான செய்திகள் 1

மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMB0) – தேர்தல்கள் ஆ​ணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(02) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

Related posts

தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திரை புத்தாண்டு நிகழ்வு

கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நீதிமன்றில் ஆஜர்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதிக்கு பூட்டு