உள்நாடு

மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று (19) முதல் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

Related posts

பொத்துவில் – பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டம் : முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட் கோரிக்கை

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்

மேல்மாகாண வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை