உள்நாடு

போலி மலேசியக் கடவுச்சீட்டுடன் நபரொருவர் கைது.

போலி மலேசியக் கடவுச்சீட்டுடன் ஆஸ்திரியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் இந்தியாவின் புதுடெல்லிக்கும், அங்கிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் சுமார் 90 இலட்சம் ரூபாவினை செலவிட்டு போலி கடவுச்சீட்டைத் தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ரஷ்ய அரசாங்க இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய உரம் தரமானது

editor

இஸ்லாஹியா அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் சற்று முன் காலமானார்!

முகக்கவசங்களுக்கான அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி வௌியானது