அரசியல்உள்நாடு

போதைப்பொருள்களின் பின்னணியில் அரசியல் – அனைத்தையும் துடைத்தெறிவேன் – அநுர

நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அநுரகுமா திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது.

போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர்.

போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. அதை அனுமதிக்கின்றனர்.

எனவே ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் குழுக்கள் அடியோடு துடைத்தெறியப்படும். இந்த உத்தரவாதத்தை நான் மக்களுக்கு உறுதியுடன் தருகின்றேன் என்றார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு வரிகள் இன்றி வழங்கப்படும் கொடுப்பனவு!

14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்!

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்