சூடான செய்திகள் 1

போதைப்பொருட்களுடன் 08 பேர் கைது

(UTVNEWS|COLOMBO) – இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையால் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த 5 இளைஞர்களும், மூன்று யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

ஸ்ரீதேவி கடுகதி ரயில் சேவை ஆரம்பம்