உள்நாடு

போதைபொருட்களுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு குற்றவியல் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரேன்பாஸ் பகுதியில் 05 கிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, பழைய விமான நிலைய வீதி சந்தியில் 05 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், இரத்மலானை பிரதேசத்தில் 02 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், மாளிகாகந்த, கல்கிஸ்ஸ மற்றும் மொரடுவை நீதவான் நீதிமன்றங்களில் இன்று (17) முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

கட்டுநாயக்க – ஆடைத்தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

அரச உத்தியோகத்தர்களை தனியார் துறைக்கு அனுப்புவது தொடர்பில் கவனம்