உள்நாடு

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், இன்று(07) காலை கடவத்தை பொலிசில் சரணடைந்த நிலையில் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் கடவத்தை பொலிசார் தெரிவித்திருந்தார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த கங்கானமலாகே வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

கொரோனாவுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட வசதிகள் [VIDEO]