உலகம்

பொருளாதார நெருக்கடி பிரிட்டிஷ் பிரதமரையும் வீட்டிற்கு அனுப்பியது

(UTV |  பிரித்தானியா) – கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவி மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக பிரித்தானிய பிரதமர் மேரி எலிசபெத் ட்ரஸ் நேற்று (20) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, லிஸ் ட்ரஸ் பிரித்தானிய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பதவி வகித்த பிரதமர் ஆவார்.

டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்திற்கு வெளியே பேசிய அவர், கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் வெற்றிடமான தலைமைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அதுவரை அவர் பிரதமராக செயற்படுவார் எனவும் பிரதமர் வெளியிட்டுள்ள டுவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவால் காலியான கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான போட்டியில் வெற்றி பெற்று லிஸ் ட்ரஸ் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகும் கடைசி தருணம் வரை அவருக்கு விசுவாசமாக இருந்தவர் லிஸ் ட்ரஸ், எனவே முன்னாள் பிரதமரின் கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்றார்.

வரிகளை குறைத்தல் மற்றும் பொது சேவையை சுருக்குதல் ஆகியவை அவரது முக்கிய வாக்குறுதிகளாக இருந்தன, ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கை பாரிய எழுச்சியை ஏற்படுத்தியது மற்றும் கன்சர்வேடிவ் கட்சியில் கூர்மையான பிளவுக்கு வழிவகுத்தது.

Related posts

6 மாதங்களாக கொரோனா இல்லை – சாதனை படைத்த நாடு

இதைவிட சிறப்பாக போராட உலகம் தயாராக இருக்க வேண்டும்

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு – பல விமான நிலையங்கள் மூடப்பட்டது

editor