உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்..

(UTV | கொழும்பு) –  பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்..

இந்த பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொலிஸார், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்காக, பொலிஸார் தொடர்ந்தும் சோதனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும்போது, அவதானத்துடன் செல்ல வேண்டும். மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்ப்பதுடன், வீதி விதிமுறைகளை உரியவாறு பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்!

இன்றும் நாளையும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்