உள்நாடு

பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது

(UTV | கொழும்பு) – லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தின் போது, விபத்துக்குள்ளான பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

குறித்த கோர விபத்தில் 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்த நிலையில், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஜந்து டிப்பர்களும், அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு