சூடான செய்திகள் 1

பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சில முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)  கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் 450 முறைப்பாடுகள் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்  கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்காக, ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் இயங்கக் கூடிய 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

பாதுகாப்பற்ற முறையில் பேரூந்து செலுத்துதல், அதிக இரைச்சலுடன் வானொலியை ஒலிக்க விடுதல் மற்றும் பயணிகளை கௌரவ குறைவான முறையில் நடத்துதல் போன்றவை தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் தலைமையில் சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி