சூடான செய்திகள் 1

பெற்றோரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் 08 மாத குழந்தை வீதியில் இருந்து மீட்பு

(UTV|COLOMBO)-பிறந்து 08 நாட்களான குழந்தை ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் படி, மீரிகம – திவுலப்பிட்டிய வீதியில் விகாரை ஒன்றுக்கு அருகில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு அற்று இருந்த குழந்தை மீரிகம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

இலங்கையில் இன்று தொழிலாளர் தினம்

பாடசாலை கூட்டுறவுச் சங்கங்கள், மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குகின்றன – அமைச்சர் ரிசாத் பதியுதீன்