உள்நாடு

புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சள் மீட்பு.

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 778 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் வெள்ளமுண்டலம தொடக்கம் கொலங்கனத்த வரையான கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (17) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடடிவடிக்கையின் போது  இந்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் வரை உலர் மஞ்சள் பொதி கடற்படையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி இன்று