சூடான செய்திகள் 1

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

(UTV|COLOMBO)-மஹியங்கனை – ஹபரவெவ – பதியதலாவ பகுதியில் உள்ள காணியொன்றில் புதையல் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், மஹியங்கனை, கலன்பிந்துனுவெவ, இபலோகம, கல்கிரியாகம, கம்ஹா மற்றும் ஓபாத பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

32 முதல் 48 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்

கணித பாட ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்…!

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் நிதியுதவி