உள்நாடு

பிரதி சபாநாயகாரின் இராஜினாமா ஜனாதிபதியால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகர் நேற்று (05) ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவி சுயாதீனமான பதவி என்பதனால் தற்போதைக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்வது அத்தியாவசியமானது எனவும் அதற்கமைய தனது பதவி விலகல் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததையடுத்து, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரிசி தட்டுப்பாடு – ஜனாதிபதி அநுர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – வர்த்தகர்கள் போராட்டம்

editor

கலவரத்திற்கு காரணம் ‘நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்’ என கோசமிட்ட அடிப்படைவாதிகளே – PMD

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி – ஜனாதிபதி (Video)