உள்நாடுவணிகம்

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை தவிர்ப்பதற்காக குறித்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பால்மா நிறுவனங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

ஒவ்வொரு மாதமும் கடன், கடன் சேவை விவரங்களை சமர்ப்பிக்க கோரிக்கை

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்