உள்நாடு

பாலினத்தை மாற்ற விரும்பும் இலங்கையின் MPக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!

பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை  ஊக்குவிப்பதால் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களிக்கும் ஆண் எம்.பி.க்கள்  பெண்களாகவும்,பெண் எம்.பி.க்கள் ஆண்களாகவும் மாற்றமடைவதற்கு  விரும்புகின்றார்கள் என்றே   கருதப்படுமென தேசிய சுதந்திர முன்னணியின்  தலைவரும்,  சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் சபையில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

பாலின சமத்துவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.அரசியலமைப்புக்கு அமையவே நீதிமன்றம் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளது. பெண் சமத்துவம் என்று குறிப்பிட்டுக் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்குள் மாற்று பாலினத்தவர்களை உள்ளடக்குவதையே நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

Related posts

இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கான கொரோனா இடர்கால கொடுப்பனவை துரிதமாக வழங்க நடவடிக்கை

15 உயிர்களைப் பறித்த எல்ல பேருந்து விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

editor

கணவனால் தாக்கப்பட்டு வரும் பெண்கள் வைத்தியர்களிடம் கணவனை காட்டிக்கொடுப்பதில்லை