உள்நாடு

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது

(UTV|கொழும்பு) – எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி வரை பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், மார்ச் மாதம் இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் அறிவித்தல்

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார்