உள்நாடு

பாராளுமன்ற விசேட அமர்வு கூடியது

(UTV | கொழும்பு) –  இன்று (08) பாராளுமன்றம் விசேட அமர்வு தினமான காலை 10.00 மணியளவில் கூடியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் உரிய வகையில் இடம்பெறாமையினால், சபையில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாமல் இருந்தது. எனவே, கேள்விகளுக்கு பதிலளிக்க இன்றைய தினம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சரவை அமைச்சர்களுக்காக 50 கேள்விகள் காணப்படுகின்றன.

அரசாங்கத்தின் சார்பில் அதற்குப் பதிலளிப்பதற்காக மாத்திரம் விசேட பாராளுமன்ற அமர்வுகள் இரண்டு தினங்களுக்கு கூட்டப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் அறிவித்துள்ளார்.

Related posts

சீரழிந்து வரும் அரசியல் கலாசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – சஜித்

editor

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு

யுக்திய சுற்றிவளைப்பில் மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!