உள்நாடு

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை அமர்வுகளை நடாத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

அத்துடன் கொரோனா தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் சபை அமர்வுகளை நடாத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17 ஆம் திகதி

editor

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor