உள்நாடு

பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படும் வாகன பேரணியின் போது பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த போட்டிகளை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவத்தலைவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்

அரசினை பொறுப்பேற்க SJB தயார் – ஹர்ஷ

சிங்கள திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீ லால் அபேகோன் காலமானார்