சூடான செய்திகள் 1

பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்திற்கு கீழ்

(UTV|COLOMBO) பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம்பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் சேவை நிமித்தம்,  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர்,  பயங்கரவாத விசாரணைப் பிரிவானது  குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் காணப்பட்ட நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் அந்தப் பிரிவு அவரின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தில் சிக்கல்-அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்

கொள்ளுபிட்டிய பிரதேச ஹெரோயின் சம்பவம் – கைது செய்யப்பட்ட ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்..!