உள்நாடு

நாளையும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (04) நாடளாவிய ரீதியில் 6 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 08.15 மணி முதல் மாலை 05.45 மணி வரை 4 மணி நேரம் 45 நிமிடங்களும் மாலை 05.45 மணி முதல் நள்ளிரவு 10.45 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கவலைக்குரிய செய்தி!

அழையா விருந்தாளியாக சுமந்திரன் – சுமந்திரனை அவமதித்த JVP

ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளருக்கு எதிராக மருத்துவ சங்கம் எச்சரிக்கை!