(UTV | கொழும்பு) – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினால் பௌத்த அமைப்புக்களை அடிபணிய வைக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(11) சுதந்திர சதுக்க வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
