உள்நாடு

நாமல் குமார விடுதலை

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் குமார கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (27) விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபருக்கு எதிரான தொடர்புடைய வழக்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர முடியாது என்று வழக்கறிஞர்கள் முன்னர் கூறியிருந்தனர்.

அதன்படி, தன்னை விடுவிக்குமாறு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை கோரினர்.

இதையடுத்து இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதவான் அவரை விடுவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தொடர்பில் நாமல் குமார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா

editor

இம்மாதத்துடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்

தபால் மூல வாக்களிப்பு – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று