உள்நாடு

நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை – விஜித ஹேரத்

(UTV | கொழும்பு) – நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

நாளை(04) மற்றும் நாளை மறுதினம் (05 ) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

நாடு சாதாரண நிலைக்கு வந்திருந்தால் இவ்வாறான ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்படும் தேவை இல்லை என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பி இருந்தார்.

Related posts

காதலர் தினத்தில் கஞ்சா சொக்லட்?

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்