வணிகம்

தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஈரான் விருப்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதறகு  தமது  நாடு விருப்பம் கொண்டிருப்பதாக ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மொஹமட் ஜவாட் சரீப்  தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  அவர்இதனை குறிப்பிட்டார் .

ஈரான் நாட்டைச்சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை பரிமாறிக்கொள்வதற்கும் தொழில்நுட்பம்  மற்றம் பொறியில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் விருப்பத்துடன் இருப்பதாகவும் ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சரீக் கூறினார்.

இதன் போது ஈரானுடனான தொடர்புகளை சுட்டிக்காட்டிய கரு ஜயசூரிய வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

Related posts

கடல் வளத்துறையை கட்டியெழுப்ப திட்டம்

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

மருந்து வகை உற்பத்திக்கு 23 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்