சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO)  வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க இந்த கோரிக்கையை பொதுமக்களுக்கு விடுத்துள்ளார்.

குறித்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய வகையில் பூர்த்தி செய்து அனுப்புமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தினாலோ அல்லது பாராளுமன்றத்திலோ, மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பட்சத்தில் உடனடியாக அந்த தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது

செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்