உள்நாடு

தேசபந்து தென்னகோன் நாளை சரண்டைவாரா?

தற்போது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (06) தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், நேற்று முன்தினம் (03) மாத்தறை, கொட்டவிலவில் உள்ள தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடைவார் என்று எதிர்பார்த்து செய்தி சேகரிக்க காலை முதல் நீதிமன்றத்தின் முன்னாலுள்ள பிரதான வாயிலில் ஊடகவிலாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

இவர் தொடர்பான வழக்கு வியாழக்கிழமை என்பதால், நாளைய தினம் அவர் ஒரு மனு மூலம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்!

ராஜபக்ஸக்கள் தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரசாங்க பங்களாவிற்கு குடிபெயர்வு

இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலக்குகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாகும்: ஜனாதிபதி விசேட உரை