உள்நாடு

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய்கள் தற்போது 220 முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதங்களில் தேசிய தேங்காய் அறுவடை 500 மில்லியனைத் தாண்டும் என்றும் தென்னை ஆராய்ச்சி நிலையம் கணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

Related posts

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட், சாதி பேதங்கள் இன்றி மக்களுக்கு சேவை செய்தார் [VIDEO]