அரசியல்உள்நாடு

துமிந்தவுக்கு விசேட வசதிகள் இல்லை – சிறைச்சாலை ஆணையாளர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு எந்த விடேச வசதிகளோ அல்லது சலுகைகளோ வழங்கப்படாது என்று சிறைச்சாலைகள் தலைமையக ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கைதி சிகிச்சை பெற்று வரும் வார்டில் உள்ள நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு சாதாரண சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இந்த கைதிக்கு மட்டும் எந்த விசேட வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையர் குறிப்பிடுகிறார்.

சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்கள் வழங்குவது சட்டபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

புதிய அமைச்சரவை பதவியேற்பு

editor

நாளை நண்பகல் முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று தீர்மானம்”