உள்நாடு

திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்து

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அவசர சத்திர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

வௌிநோயாளர் பிரிவு, இருதய நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சுவாசநோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் வழமைபோல சேவைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பிரத்தியேகமாக இரண்டு விடுதிகள் தயார் செய்யப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related posts

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம்

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்