தாய்லாந்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடக்கு தாய்லாந்தில் இருந்து கடரோத ராயோங் மாகாணத்துக்கு ஆய்வு சுற்றுலா செல்வதற்காக பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்த அரசு ஊழியர்கள் சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.
இரவுப் பயணத்தின்போது பிரக்சின்புரி மாகாணத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸாசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.