சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சுற்றுநிரூபம்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் குறித்த இந்த கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்குரிய 2018ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணவனின் அசிட் வீச்சுக்கு இலக்காகிய மனைவி மற்றும் மகள்

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!